News March 26, 2024

பேராவூரணியில் தோப்புக்கரணம் செய்து உலக சாதனை

image

பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவில் வளாகத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் பிரதிநிதி நாகராஜன் முன்னிலையில் பேராவூரணியை சேர்ந்த ஜெ. மணிகண்டன் என்பவர் 18 நிமிடங்களில் 558 தோப்புக்கரணம் செய்து சாதனை படைத்தார். அவருக்கு அதற்கான சான்றிதலும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் கலந்துகொண்டார்.

Similar News

News April 19, 2025

தனியார் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

தஞ்சை அருகே திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Agri Research Analyst பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 19, 2025

போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 101 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க என்ற ஆப்சனை தேர்வு செய்து, விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 19, 2025

தஞ்சை இளைஞரை கௌரவித்த சிங்கப்பூர் அரசு

image

சிங்கப்பூரில் கடந்த 8ஆம் தேதி, ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு “Community Lifesaver Award” வழங்கி கௌரவித்துள்ளது.

error: Content is protected !!