News March 13, 2025
பெற்றோர்களுக்கு மாநகர காவல்துறை அறிவுறுத்தல்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்படி மாநகர பகுதிகளில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதைதடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், இன்று(மார்ச்.13) மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், 18 வயது பூர்த்தியடையாத தங்கள் குழந்தைகள் வாகனங்களை ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News April 21, 2025
நெல்லை: உயர் கல்வி ஆலோசனை சிறப்பு எண்கள் அறிமுகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும் 95003 24417, 95005 24417 ஆகிய சிறப்பு எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார். *மாணவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*
News April 21, 2025
நெல்லையில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் சோலார் நிறுவனத்தில் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளங்கலை அறிவியல்(BSC) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாத ஊதியமாக 25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 21, 2025
பைக் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

நெல்லை கேடிசி நகரை சேர்ந்தவர் ஜெப்ரின் சாமுவேல் (22). இவர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் டக்கரம்மாள்புரம் அருகே சென்ற போது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.