News April 7, 2025

பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

image

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.

Similar News

News July 7, 2025

ஈரோடு அருகே தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

image

ஈரோடு, முகாசிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவன் 50. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று போதையில் நடந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டதில், ஆண்டவன் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News July 6, 2025

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு ,கோவை, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News July 6, 2025

ஈரோடு அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் ஈரோட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக நடைபெறும் எனவும், சபை நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை அதற்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!