News April 7, 2025
பெருந்துறை அருகே விபத்து: 20 பேர் காயம்

கோவையில் இருந்து சேலத்துக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்றது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் பிரிவு அருகில் மேம்பால பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். பேருந்தை அதிவேகத்தில் இயக்கியதால் பேரிகார்டு பகுதியில் திருப்ப முடியாத நிலையில், அதன் மீது மோதி மண் குவியல் மீது ஏறி விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.
Similar News
News December 22, 2025
ஈரோட்டில் களம் இறங்கும் அடுத்த அரசியல் வாரிசு!

மறைந்த EX மத்திய அமைச்சரும், EX தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான EVKS இளங்கோவனின் பேத்தியும், EX MLA திருமகன் ஈவெரா மகளுமான சமண்ணா ஈவெரா. EVKS இளங்கோவனின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை டெல்லியில் நேற்று சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
News December 22, 2025
ஈரோடு அருகே பெண் துடிதுடித்து உயிரிழப்பு!

ஈரோடு பொம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ரம்யா, நேற்று(டிச.21) புதிதாகக் கட்டி வரும் வீட்டிற்குள் கதவைத் தாழிட்டுத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் இருந்தால், தமிழக அரசின் உதவி மையமான 104 தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்.
News December 22, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

பெற்றோர்களே, குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவதால் கண் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்போனில் மூழ்கினால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் மற்றும் தவறுதலாக
மோசடி நபர்களின் LINK-களை கிளிக் செய்ய அதிக
வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மேலும் தொடர்புக்கு சைபர் க்ரைம் எண். 1098 அழைக்கலாம்.


