News January 22, 2025
பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 19, 2025
செங்கல்பட்டு: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

செங்கல்பட்டு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
செங்கல்பட்டு: ரயில் முன் பாய்ந்த அரசு ஊழியர்

தாம்பரம் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருபவர் யுவராஜ். இவர் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவச் சான்றிதழ் அனுப்பி மருத்துவ விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு யுவராஜின் மேலதிகாரி, A.E. கோவிந்தராஜ் விடுமுறையை நிராகரித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த யுவராஜ் நேற்று காலை மறைமலை நகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


