News January 22, 2025

பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News February 23, 2026

செங்கையில் பரிதாப பலி!

image

செய்யூர் அருகே தேவனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் விஜயகுமார்(30). விவசாயியான இவர், செய்யூரில் இருந்து தேவனூரில் உள்ள தனது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தாமூரில் இருந்து செய்யூர் நோக்கி சென்ற டெம்போ லாரி மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 23, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

படப்பையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர மோகடோ (வயது 53) என்ற லாரி ஓட்டுநர் சாலை விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். தொழிற்சாலையில் இருந்து வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 23, 2026

செங்கல்பட்டு: இளைஞர்கள் துடிதுடித்து பலி!

image

செங்கல்பட்டு: கொளத்தூர் மலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). இவர் தனது நண்பர் விக்னேஷுடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, மேலகண்டை அருகே எதிர் திசையில் வந்த கீழகண்டை கிராமத்தைச் சேர்ந்த திவாகர் (23) பைக், பிரேம் குமார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பிரேம்குமார் மற்றும் திவாகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விக்னேஷ் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!