News January 22, 2025

பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News January 10, 2026

செங்கல்பட்டு: 7ஆண்டு சிறை தண்டனை

image

செங்கல்பட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பரோட்டா மாஸ்டருக்கு 7ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் பழனிச்சாமி என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார். அவர் கடனை திருப்பி கேட்டபோது சிறுமியிடம் தருவதாக கூறினார். சிறுமி அவரை பார்க்க சென்ற போது அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எனவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

News January 10, 2026

செங்கை: Gpay, Phone pay பயனாளர்கள் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

செங்கை: அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள்!

image

திருப்போரூர் அடுத்த வெங்கூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 9 கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மேலையூர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!