News January 22, 2025

பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News November 8, 2025

செங்கல்பட்டு: இன்று குடும்ப அட்டை குறைதீர் முகாம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரகளுக்கான குடும்ப முகாம் நாளை (நவ.8) நடைபெற உள்ளது. வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக குறைதீர் முகாம் செங்கல்பட்டு-தைலாவரம், செய்யூர்-வடப்பட்டினம், மதுராந்தகம்-பூதூர், திருக்கழுக்குன்றம்-வாயலூர், திருப்போரூர்-மேலையூர், வண்டலூர்-கீரப்பாக்கம் பகுதிகளில் நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், புதிய அட்டை போன்ற சேவைகளை பெறலாம். ஷேர்!

News November 8, 2025

செங்கல்பட்டு: பொக்லைன் மீது மோதி அரசு பேருந்து விபத்து!

image

செங்கல்பட்டு, மாம்பாக்கம், சோனலுாரிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற ’55சி’ மாநகர பேருந்து, மூன்று பெண்கள் உட்பட 15 பயணியருடன், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் புறப்பட்டது. வண்டலுார் அடுத்த கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, முன்னால் சென்ற ‘பொக்லைன்’ இயந்திரம் மீது மோதி, கால்வாயில் கவிழ்ந்தது. இதில், 15 பயணியரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News November 8, 2025

செங்கல்பட்டு மக்கள் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை நேற்று (நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!