News January 22, 2025
பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 3, 2026
செங்கை: கிரைண்டரில் விழுந்து வாலிபர் பலி!

ஊரப்பாக்கம், ரோகிணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது ககன் சிவனேசன்(32) தினமும் குடித்து விட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், போதையில் கிரைண்டரில் விழுந்த அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
செங்கல்பட்டு: நாளை மின்சார ரயில் ரத்து!

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களில் நாளை(ஜன.4) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 11:45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சி.பெருமாள் கோவில் – செங்கை இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!
News January 3, 2026
செங்கல்பட்டில் உடல் நசுங்கி கொடூர பலி!

மேடவாக்கத்தில் இருந்து செம்மொழி மெயின் சாலை வழியில் பகதூர் சிங்(39) என்பவர் ஓட்டி வந்த பைக் தண்ணீர் லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கிய பகதூர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அவர் பின்னால் லிப்ட் கேட்டு வந்த மதுரையைச் சேர்ந்த பாஸ்கர்(28) என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, லாரி டிரைவர் இசக்கியை(24) போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


