News April 24, 2025
பெரிய கோவிலில் துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு

ஜம்முகாஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரியகோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோபுர வாசலில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News December 3, 2025
தஞ்சாவூர்: ஒரே நாளில் 111 வீடுகள் இடிந்து சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 111 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் 73 குடிசை வீடுகளும், 38 ஓட்டு வீடுகளும் அடங்கும். மேலும், 11 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
News December 3, 2025
தஞ்சாவூர்: ஒரே நாளில் 111 வீடுகள் இடிந்து சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 111 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் 73 குடிசை வீடுகளும், 38 ஓட்டு வீடுகளும் அடங்கும். மேலும், 11 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
News December 3, 2025
தஞ்சை: தண்டவாளத்தில் இறந்து கிடந்த மூதாட்டி

தஞ்சாவூர் – ஆலக்குடி ரயில்வே தண்டவாளப் பகுதியில் நேற்று (டிச.02) 70 வயது மூதாட்டி ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து, அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், ரயில்வே இருப்புப் பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, உயிரிழந்த மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


