News April 26, 2025

பெரம்பலூர்: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

Similar News

News April 27, 2025

பெரம்பலூர் வேளாண் மையத்தில் வேலை வாய்ப்பு

image

பெரம்பலூரில் உள்ள் மத்திய வேளாண் மையத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12 படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 முதல் ரூ.81000வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ICAR – KRISHI VIGYAN KENDRA மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். வேலை தேடும் நபருக்கு ஷேர் செய்யவும்

News April 27, 2025

பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் நேற்று இரவு 9 மணியளவில் தெற்கு இருங்களூர் கோவில் திருவிழாவில் சீரியல் லைட் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News April 27, 2025

பெரம்பலூர்: கிணற்றில் விழுந்து 10ஆம் வகுப்பு மாணவன் பலி

image

பெரம்பலூர் அடுத்த வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. அவரது மகன் கவுதம்(15) அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையில் இருந்த இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி வயலில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை மீட்ட கை.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!