News April 18, 2025

பெரம்பலூர்: ரேஷன் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி மையம் 1800 425 5901 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம். ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க, 18005995950 என்ற எண்ணை பயன்படுத்தலாம். இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்

Similar News

News November 26, 2025

பெரம்பலூர்: புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் அமைச்சர்

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவைகளை தொடக்கி வைப்பதற்காகவும், பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைப்பதற்காகவும், வட்டாட்சியர் அலுவலக மேம்பாடு பணியை துவக்கி வைப்பதற்காகவும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் இன்று குன்னம் பகுதிக்கு வருகை தர உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2025

பெரம்பலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

பெரம்பலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 26, 2025

பெரம்பலூர் இளைஞர் சாதனை

image

பெரம்பலூர் கேகே நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் மும்பையில் நடைபெற்ற அமெச்சூர் ஒலிம்பியா இந்தியா என்ற பாடிபில்டர் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலிருந்து 150 பேர் கலந்து கொண்ட இப்போட்டியில் மணிகண்டன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெரம்பலூரின் புகழை நிலைநாட்டியதாக மக்கள் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!