News August 7, 2024
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 34 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Similar News
News December 22, 2025
பெரம்பலூர்: வாகனம் மோதி ஒருவர் பலி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் செல்வராஜ்(85). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான இவர், அவரது மனைவி வசந்தகுமாரியுடன்(77) வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை பெரம்பலூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் சிறுவாச்சூர் அணுகு சாலையில் சாமுவேல் நடந்து சென்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 22, 2025
பெரம்பலூர்: விபத்தில் பெண் ஒருவர் பலி

வேப்பந்தட்டை தாலுகா, மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மோகனின் மனைவி செல்லம்மாள் (55). இவர் ரஞ்சன்குடி கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு செல்லும் வழியில், மங்கலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதில் செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
News December 21, 2025
பெரம்பலூரில் நடைபெற்று இலவச கண் பரிசோதனை முகாம்

பெரம்பலூர் நகரில் இன்று (டிச.21) காலை 8-1 மணி வரை பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பெரம்பலூர் விக்டரி லயன்ஸ் சங்கம், பெரம்பலூர் டவுன் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


