News November 25, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த புரோ பிகோனசோல் 25 EC (அ) ஹெக்ச கோனசோல் 5EC இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சான கொள்ளையை ஏக்கருக்கு 200 மி. லி.வீதம் இழை வழியாக தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி பயன் பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தின் பச்சை மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, பெரம்பலூர் அருகே அமைந்துள்ள குரும்பலூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதுபோல மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவக்குடி, கொட்டரை, மருதையாறு உள்ளிட்ட 7 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

News December 5, 2025

பெரம்பலூரில் வருவாய்துறை சங்கம் மறியல் போராட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட வருவாய்த்துறை சங்கம் சார்பில், நேற்று (டிச.04) மாவட்ட ஆட்சியர் நுழைவு வாயில் மற்றும் பாலக்கரை ரவுண்டான அருகில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், வருவாய்துறை சங்க தலைவர் பாரதிவளவன், செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டப் பொருளாளர் குமரிஆனந்தன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

News December 5, 2025

பெரம்பலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in என்ற இணையதளத்தில்<<>> பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!