News August 14, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
பெரம்பலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News October 17, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களும், வடகிழக்கு பருவ மழையையொட்டி அடுத்த மாதத்திற்குரிய நவம்பர் மாத ஒதுக்கீடனா 12 முதல் 35 கிலோ அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். மேலும், நவம்பர் மாத அரிசியை அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள் வழக்கம் போல தங்களுக்கு உரிய அரிசியினை நவம்பர் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
பெரம்பலூர்: தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் உதவித்தொகை பெற அகவை முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை tamilvalarchithurai.org/agavai என்ற இணையதளம் வாயிலாகவோ 17.11.2025-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.