News August 14, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
பெரம்பலூர்: மின் தடை அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் துணை மின் நிலையம் (செப்.16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிறுவாச்சூர், அயலூர், தீரன் நகர், செல்லியம்பாளையம், நொச்சியம், நட்டார் மங்கலம், நாரணமங்கலம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கபடுகிறது.
News September 15, 2025
பெரம்பலூர் மக்களே இதை தெரிந்துகொள்ளுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் எத்தனை சட்டமன்ற தொகுதிகள், தாலுகா, நகராட்சி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
4 தாலுகா
▶️பெரம்பலூர்
▶️வேப்பந்தட்டை
▶️குன்னம்
▶️ஆலத்தூர்
2 சட்டமன்ற தொகுதிகள்
▶️பெரம்பலூர் (தனி)
▶️குன்னம்
ஒரு நகராட்சி
▶️பெரம்பலூர்
4 பேரூராட்சிகள்
▶️அரும்பாவூர்
▶️குரும்பலூர்
▶️இலப்பைக்குடிகாடு
▶️பூலாம்பாடி. ஷேர் பண்ணுங்க!
News September 15, 2025
அண்ணா பிறந்தநாள் விழா எம்பி எம்எல்ஏ பங்கேற்பு

பெரம்பலூரில் திமுக மாவட்ட அலுவலகம் மற்றும் கிருஷ்ணாபுரம் வேப்பந்தத்தை அழகிய பகுதிகளில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாள் விழா திமுக சார்பில் நடந்தது. விழாவில் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்பி அருண நேரு, எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் அண்ணாவின் திருவுரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.