News April 11, 2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…

Similar News

News December 17, 2025

பெரம்பலூர்: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம்<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், 19.12.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளோர் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 04328-296352-ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News December 17, 2025

பெரம்பலூர்: கிளைச் சிறையில் ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பெரம்பலூர் கிளைச் சிறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் நேற்று (டிச.16) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!