News August 25, 2024
பெரம்பலூர் மாவட்டத்திற்கு நான்காவது இடம்

மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆகஸ்ட் 24 இன்று தமிழ் கல்ச்சுரல் (ம) யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நடத்திய 9 – வது ஆண்டு 2024 மாநில அளவிலான யோகாசன போட்டியில் பெரம்பலூர் பாரத் பஃர்ஸ்ட் ப்ரைமரி & நர்சரி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் யோகாசன போட்டியில் கலந்து கொண்டு முதல், 2,மற்றும் 3 வது இடத்தையும் மாநில அளவில் நான்காவது இடத்தையும் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

நெற்குணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ( 27). இவருக்கு கோவையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுமாப்பிள்ளை மனோஜ் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 27, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மணி, கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாலை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன் (குன்னம்), செல்லப்பாங்கி (கூத்தூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
News November 27, 2025
பெரம்பலூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


