News August 10, 2024

பெரம்பலூர் பிரபல ஹோட்டலில் தரமில்லா உணவு இளைஞர் குற்றச்சாட்டு

image

பெரம்பலூர் முரளிதரன் என்ற இளைஞர் நேற்று தனியார் ஹோட்டலில் வாங்கிய ஆப்பம் தரம் இல்லாமல் இருப்பதாகவும், தரமற்ற உணவுகளை தரும் இது போன்ற உணவகங்களை பெரம்பலூர் உணவு கட்டுப்பாட்டு துறை கண்டு காணாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கடையின் முதலாளியிடம் கேட்டால் மெத்தன போக்காக பதில் கூறுகிறார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News

News November 27, 2025

பெரம்பலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

பெரம்பலூர்: புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஊராட்சியில், ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 15000 லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் மையத்தினை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 27, 2025

பெரம்பலூர்: மின்வாரிய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

பெரம்பலூர் மாவட்டம், நான்கு ரோடு அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு
மின்சாார சட்ட மசோதாவை திரும்பப்பெறுக, உள்ளிட்ட நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறுக, உத்திரப்பிரதேச மின்வாரியத்தை தனியார்மயம் செய்யாதே என பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!