News August 16, 2024
பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
பெரம்பலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
பெரம்பலூர்: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம் துறையூர் சாலையில் அமைந்துள்ள மாவட்ட சாரண சாரணியர் கூட்ட அரங்கில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் அறிவுறுத்தியுள்ளார்.
News December 24, 2025
பெரம்பலூர்: SIR பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் SIR-க்கு பிறகு 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிச.27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உங்கள் அருகில் உள்ள வாக்கு சாவடி மையங்களை தெரிந்து கொள்ள <


