News August 16, 2024
பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் சிறப்பு கல்விக் கடன் முகாம், வரும் நவம்பர் 27-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 23, 2025
பெரம்பலூர்: செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
பெரம்பலுர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


