News August 16, 2024

பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

image

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.

Similar News

News September 16, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் Power Cut பகுதிகள்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை பகுதிகள் குறித்து பார்க்கலாம்!
⏩தழுதாழை நெய்குப்பை உடும்பியம்
⏩அணுக்கூர்
⏩திருப்பயர்
⏩எஸ்.புத்தூர்
⏩ஆலம்பாடி
⏩தீரன் நகர்
⏩செஞ்சேரி
⏩செட்டிகுளம் INDUSTRIAL,
⏩செட்டிகுளம் WATERWORKS FEEDER
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 16, 2025

பெரம்பலூர் மக்களே தேர்வு எழுத ரெடியா?

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்து தேர்வு (11.10.2025) அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News September 16, 2025

பெரம்பலூர்: மின் தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் துணை மின் நிலையம் (செப்.16) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிறுவாச்சூர், அயலூர், தீரன் நகர், செல்லியம்பாளையம், நொச்சியம், நட்டார் மங்கலம், நாரணமங்கலம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கபடுகிறது.

error: Content is protected !!