News August 16, 2024

பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

image

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

பெரம்பலூர்: Phone காணாமல் போன இத செய்ங்க!

image

பெரம்பலூர் மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 27, 2025

பெரம்பலூர்: ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு <>TNePDS<<>> என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

பெரம்பலூர்: ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள்

image

பெரம்பலூர், வடக்கு மாதவி சாலை தில்லை நகரில் 13 பவுன் நகை, வெளிப்பொருட்கள், வெளிநாட்டுப் பணம்; நால்ரோடு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரூ.3¼ லட்சம், 44 கிராம் வெள்ளி நாணயங்கள், செல்போன்; ஆட்சியர் அலுவலகம் அருகே பீமநகரில் ஒரு வீட்டில் 3¾ பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1,20,500 பணம்; வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6¾ பவுன் தாலிச்சங்கிலி என ஒரே மாதத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

error: Content is protected !!