News March 21, 2024

பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், சட்டமன்றத் தொகுதிகள், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும்.

Similar News

News October 21, 2025

திருச்சி: ரயில்வே கோட்ட மேலாளர் அறிவிப்பு

image

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக்ராம் நெகி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திருச்சி கோட்டத்தில் அக்.1ம் தேதி முதல் இன்று வரை 116 ரயில் இயக்கப்பட்டு, மொத்தம் 21,68,395 பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பிரிவில் 16,63,296 பயணிகளும் முன்பதிவு செய்யப்பட்ட பிரிவில் 5,05,099 பயணிகளும் பயணம் செய்துள்ளதாக’’ தெரிவித்தார் அவர்.

News October 21, 2025

திருச்சி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொறுத்து திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை காலம் முடிவடையும் வரை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 21, 2025

திருச்சி: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!