News March 21, 2024
பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், சட்டமன்றத் தொகுதிகள், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும்.
Similar News
News November 26, 2025
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
திருச்சி: வாகனம் ஏலம் அறிவிப்பு – கலெக்டர்

திருச்சி மகளிர் சிறையில் பயன்படுத்தப்பட்ட டெம்போ ட்ராவலர் வேன் வரும் டிச.11-ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் டிச.9-ம் தேதி வாகனத்தை பார்வையிட்டு கொள்ளலாம். ஏலம் நடைபெறும் தினத்தன்று ரூ.5000 முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் முடிந்த பின் உரிய தொகையுடன், வரிகளை செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு சிறை!

முசிறி, கீழத்தெருவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் என்பவர் ரூ.700 லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் விஏஓ செல்வராஜுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.


