News April 16, 2025
பெரம்பலூர்: கோடை காலத்தில் மக்கள் செய்யக்கூடாதவை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக, பொதுமக்கள் கோடை காலத்தில் எவையெல்லாம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், டீ, காபி, ஆல்கஹால் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் எனவும், மற்றும் வெற்றுக்காலுடன் வெயிலில் நடக்க வேண்டாம், . மேலும் முக்கியமாக குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 27, 2025
தேசிய அளவிலான நீச்சல் போட்டி, பெரம்பலூர் மாணவி தேர்வு

சென்னை வேளச்சேரியில் நேற்று (அக்.25) 6வது ஜூனியர் & 11வது சீனியர் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி (CwD Dwarfism) ஜீவா, 3 தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் இவர் வரும் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நேஷனல் அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
News October 26, 2025
பெரம்பலூர்: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools-யில் (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 26, 2025
பெரம்பலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108113>>பாகம்-2<<>>)


