News August 7, 2024
பெரம்பலூர் எம்பி கருணாநிதிக்கு மரியாதை

டெல்லி அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் எம்பி அருண் நேரு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கழக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News November 16, 2025
அரியலூர்: லாரியில் மோதிய வாலிபர் பாலி!

அரியலூர், பொய்யூரை சேர்ந்த பாலமுருகன் (24), இவர் நேற்று காலை உறவினரான ஜனனி (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலமுருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் பால முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்து வந்த ஜனனி காயங்களுடன் உயிர் தரப்பினார்.
News November 16, 2025
அரியலூர்: திருட்டில் உடந்தையாக இருந்த 5 போலீசார்!

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி, பொதுமக்களிடம் முறையான அணுகுமுறையின்றி கடுமையாக நடந்து கொண்டது, மணல் திருட்டில் குற்ற வாளிகளுக்கு உடந்தையாக இருந்தது மற்றும் போலீசாரின் தனிப்பிரிவில் இருந்து கொண்டு முறையாக தகவல்கள் அளிக்காத போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி தூத்தூர் மற்றும் விக்கிரமங்கலம் போலீசை சேர்ந்த 5 போலீசாரை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
News November 16, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.


