News April 17, 2024

பெரம்பலூர் : உண்டியல் மொத்த மதிப்பு 3,20,000

image

பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் உண்டியல் திறப்பு இன்று,
திருக்கோவில் ஆய்வாளர் தீப லட்சுமி முன்னிலையில் திறக்கப்பட்டது. திருக்கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ரொக்கம் மற்றும் நாணயங்களை எண்ணினர்.
இதில் உண்டியலில் ரெக்கம், தங்கம், வெள்ளி உட்பட சுமார் மொத்த மதிப்பு 3,20,000 என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Similar News

News December 9, 2025

பெரம்பலுர்: பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு

image

வேலூர் VIT பல்கலைக் கழகம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் போட்டியில், வெற்றி பெற்ற Top 10 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவில், வாலிகண்டபுரம் அ. மே நி.பள்ளி மாணவன் யுவன் ஸ்ரீக்கு, VIT வேந்தர் விசுவநாதன் சான்றிதழ் மற்றும் ரூ.7000 ரொக்கப் பரிசும் பெறுகிறார். அம்மாணவனை நேற்று (08.12.2025) பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராசு மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

News December 9, 2025

பெரம்பலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள், பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். வருகிற டிச.31ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-296565 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!