News December 31, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை

image

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், கருத்தரங்கம், கவியரங்கம் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வள்ளுவரின் சிலை இருப்பதை உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று (டிச.30) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. வான்புகழ் கொண்ட வள்ளுவனின் புகழ் பரவட்டும், புத்தொளி பிறக்கட்டும்

Similar News

News November 28, 2025

பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில்ட்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. பின்பு வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் பல வகைகளை உண்ண வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.

News November 28, 2025

பெரம்பலூர்: புயல் அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வகுப்பு வருகின்ற டிசம்பர்-03ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. எனவே போட்டித் தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்தி.

error: Content is protected !!