News August 24, 2024
பெரம்பலூரில் 2,16,624 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,71,590 குழந்தைகள் மற்றும் மாணவர்கள் 45,034 பெண்கள் என மொத்தம் 2,16,624 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.முன்னதாக குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
Similar News
News November 27, 2025
பெரம்பலூர்: புதிய பேருந்து சேவை துவக்கம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருத்து – லப்பைகுடிகாடு, பென்னகரம், குரும்பாபாளையம், சில்லக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நான்கு பழைய நகர பேருந்துகளுக்கு பதிலாக, புதிய நான்கு நகர பேருந்துகளை துவக்கி வைத்தார்.
News November 27, 2025
பெரம்பலூர்: புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

நெற்குணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் ( 27). இவருக்கு கோவையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுமாப்பிள்ளை மனோஜ் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உறவினர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 27, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்மணி, கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாலை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன் (குன்னம்), செல்லப்பாங்கி (கூத்தூர்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


