News April 10, 2025
பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

பெரம்பலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில்ட்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. பின்பு வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் பல வகைகளை உண்ண வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.
News November 28, 2025
பெரம்பலூர்: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வகுப்பு வருகின்ற டிசம்பர்-03ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. எனவே போட்டித் தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்தி.


