News August 24, 2024
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும்

மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 30-8 2024 அன்று 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான விவசாய கடன், இடுபொருள், நலத்திட்ட உதவிகள், விவசாயிகள் சம்பந்தமான அனைத்து குறைகளும் விவாதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
பெரம்பலூர்: சாலை விபத்தில் முதியவர் பலி

தெரணி கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி (60) என்பவர் இருசக்கர வாகனத்தில் பாடலூர் சர்வீஸ் ரோடு வழியாக சென்று, தனியார் பைக் ஷோரூம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியுள்ளது. இதில் கலியமூர்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
News December 22, 2025
பெரம்பலூர்: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-ல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், <
News December 22, 2025
பெரம்பலூர்: வாகனம் மோதி ஒருவர் பலி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் செல்வராஜ்(85). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான இவர், அவரது மனைவி வசந்தகுமாரியுடன்(77) வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று விட்டு நேற்று அதிகாலை பெரம்பலூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் சிறுவாச்சூர் அணுகு சாலையில் சாமுவேல் நடந்து சென்றபோது, அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


