News September 14, 2024
பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, நாளை(14/9/24) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பை தேசிய மக்கள் நீதிமன்றம் (NATIONAL LOK ADALAT) செய்ய உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்கு மற்றும் வங்கி கடனுதவி ஆகிய வழக்குகளில் தீர்வு கண்டு சமரசமாக செல்லாம்.
Similar News
News October 16, 2025
பெரம்பலூர்: காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் நகர் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி சிறப்பு காவல் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. கூடுதல் உதவிக்கு எஸ்பி 8826249399, ஏஎஸ்பி 9942944442, டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் 9943514304, தனிப்பிரிவு ஆபிஸ் 9438100690, கண்ட்ரோல் ரூம் 9498181225, தீயணைப்பு அதிகாரி 9943360656 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
பெரம்பலூர்: கரை பலப்படுத்தும் பணியை ஆய்வு ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியின் கரைகள் பலப்படுத்தும் பணிகளை, இன்று (15.10.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News October 15, 2025
பெரம்பலுர்: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.