News August 15, 2024
பெரம்பலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு

தனியார் வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து டிஎஸ்பி வளவன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விதிகள், குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News November 14, 2025
பெரம்பலூர்: வரலாற்று சிறப்பு மிக்க இடம் பற்றி தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவரும் தெரிந்து கொள்ள இதை உடனே ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
பெரம்பலூர்: தொழில்நுட்பப் பணிகளுக்கான போட்டித் தேர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கணினி வழிப் போட்டித் தேர்வு, வருகிற நவ.16ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வானது, ரோவர் பொறியியல் கல்லூரி, சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெறும் என்றும் தேர்வு எழுதவிருப்போர், தேர்வுக்கான அறிவுறுத்தல்களைக் கவனமாகப் பின்பற்றுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
பெரம்பலூர்: B.E போதும்.. இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


