News April 29, 2025

பெரம்பலூரில் உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம்

image

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சிகளளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஷ் பஞ்சால் உத்தரவின்படி உழைப்பாளர் தினமான (மே.01) அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது, கிராம சபையில் ஊராட்சி கிராம மக்களின் குறைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. பெரம்பலூர் மக்களே கிராம சபை கூட்டம் மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News January 7, 2026

பெரம்பலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) அதிக மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

பெரம்பலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

பெரம்பலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 7, 2026

பெரம்பலூர்: காதல் தோல்வியால் தற்கொலையா?

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் காரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளையராஜா (20). இவர் வெளிநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து கொண்டார். மேலும் காதல் தோல்வியா என்ற கோணத்தில் பாடாலூர் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

error: Content is protected !!