News August 2, 2024
பெரம்பலூரில் ஆபத்தான பயணம் பள்ளி மாணவர்கள்

பெரம்பலூர் நகரப் பகுதியில் வானொலி திடல் சாலையில் காலை முதல் மாலை வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய விபத்து நடப்பதற்கு முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News November 17, 2025
பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி இதுவரை 5,86787 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து, டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
பெரம்பலூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
பெரம்பலூர்: இந்த பகுதிகளில் நாளை மின் தடை

கிருஷ்ணாபுரம், எசனை மற்றும் சிறுவாச்சூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.18) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


