News April 16, 2025
பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் விசாரணை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி மெயின் ரோட்டைச் சேர்ந்த மதியழகனின் மனைவி உமா(36) என்பவரின் மாமனார் கண்ணையன், மாமியார் மேகலா மற்றும் நாத்தனார் அகிலா ஆகியோர் குழந்தை இல்லாதது குறித்து குறை கூறி உமாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
அரியலூர்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள்

அரியலூர் மாவட்டத்தில், டிப்ளமோ முதல் முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கான சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: கல்வி கடன் பெறும் வழிமுறைகள்

அரியலூர் மாவட்டத்தில், டிப்ளமோ முதல் முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிப்பதற்கான சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
அரியலூர்: படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன்!

அரியலூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், கல்வி கடன் மேளா அரியலூர் ஆட்சியரகத்தில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.


