News April 16, 2025
பெண் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் விசாரணை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி மெயின் ரோட்டைச் சேர்ந்த மதியழகனின் மனைவி உமா(36) என்பவரின் மாமனார் கண்ணையன், மாமியார் மேகலா மற்றும் நாத்தனார் அகிலா ஆகியோர் குழந்தை இல்லாதது குறித்து குறை கூறி உமாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 17, 2025
பெண் காவலர்களுக்கு ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்பி

அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்வேஷ் இன்று (அக்.17) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஓய்வு அறையை திறந்து வைத்தார். பணிபுரியும் பெண் அமைச்சு பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் பணி இடைவெளி நேரத்தில் ஓய்வு எடுக்கவும், கர்ப்பிணிகளுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்கள் பயன்பெறு வகையிலும், மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் குறிஞ்சி மகளிர் ஓய்வு அறை திறக்கப்பட்டது.
News October 17, 2025
அரியலூர்: ரூ.29,000 சம்பளம்.. அரசு வேலை!

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
8. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!