News February 17, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை 

image

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிப்.17 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை காண காசோலையினை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ப.ஆகாஷ் அவர்கள் வழங்கினார்கள்.

Similar News

News December 19, 2025

நாகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

image

நாகை மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 1,000 பேருக்கு ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News December 19, 2025

நாகை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000

image

நாகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் வழியாக NMMS திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் என 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.20 கடைசி நாளாகும். எனவே இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 19, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பசு, எருமை வெள்ளாடு போன்ற கால்நடைகளை எளிதில் தாக்கக் கூடிய கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் 29/12/2025 முதல் 28/01/2026 வரை கிராமங்கள் தோறும் நடைபெற உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!