News August 14, 2024

பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24 ஆம் தேதி மாநில அரசின் விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த விருதுக்கு நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

காஞ்சிபுரத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா-2025

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நான்காவது மாபெரும் புத்தக திருவிழா-2025 தொடங்கப்படவுள்ளது. இப்புத்தக திருவிழா 19.12.2025 முதல் 29.12.2025 வரை 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளனர்.

News December 12, 2025

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு

image

13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 12, 2025

காஞ்சிபுரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!