News October 23, 2024

பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த நபருக்கு ஆயுள் தண்டனை

image

ஊத்தங்கரை அண்ணா நகரை சேர்ந்த இராமாயி (40), சிவக்குமார் (30) ஆகிய இருவரும் ஊத்தங்கரை நேருநகரில் திருமணம் செய்துகொள்ளாமல் 8 வருட காலம் குடும்பம் நடத்தி நடத்தி வந்துள்ளார். இராமாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு சிவகுமார் 18.05.2018-ம் தேதி இராமாயி என்பவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த வழக்கில் நேற்று மகிளா கோர்ட் சிவக்குமாருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

Similar News

News September 14, 2025

கிருஷ்ணகிரி: பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்காக, ஊராட்சி வரி ரசீது, கட்டட வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்தப் பத்திரம் மற்றும் ரூ.600 செலுத்தியதற்கான வங்கி சலான் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கடைகள், கல் அல்லது தார்சுக் கட்டடங்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

News September 14, 2025

கிருஷ்ணகிரி: ஷேர் மார்க்கெட் மோசடி: காவல்துறை எச்சரிக்கை

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, பொதுமக்களுக்கு, ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், இரண்டு மடங்கு லாபம் என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளது. நமது நம்பிக்கையைப் பயன்படுத்தி, பணம் பறிக்கும் மோசடி முயற்சிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மோசடிகளில் ஏமாந்திருந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை அழைக்கலாம்.

News September 13, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப். 13) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!