News April 9, 2025
பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கொடூரம்

திருவள்ளூரில், பள்ளித் தோழியிடம் ஆசை வார்த்தை பேசி வீட்டிற்கு வரவழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலியுடன் கூட்டு சேர்ந்து அப்பாவி பெண்ணிடம் நகைப்பறிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து காதலன் ஜெயந்தன் உடன் சேர்ந்து ஹேமலதா என்பவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளனர். ஹேமலதா தலைமறைவாகியுள்ளார்.
Similar News
News April 19, 2025
திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆர்.கே. பேட்டை-044-27845709, ஆவடி-044-26850313, திருவள்ளூர்-044-27660254, பூவிருந்தவல்லி- 044-26274314, ஊத்துக்கோட்டை-044-27630262, கும்மிடிப்பூண்டி-044-27921491, பொன்னேரி-044-27972252, திருத்தணி-044-27885222, பள்ளிப்பட்டு-044-27843231. *மிக முக்கிய நம்பர்களான இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
News April 19, 2025
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவர்

ஆவடி கன்னடபாளையம் பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் சத்யா(42). இவரது கணவர் ஜெபராஜ் உடனான கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், ஜெபராஜ் நேற்று மாலை பெட்ரோல் கேனுடன் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்து தன் மீதும் தன் மனைவி மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். 50 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 19, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 682 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த <