News March 30, 2024
பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

இலுப்பையூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள். டேங்க் ஆப்ரேட்டரான இவர் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் பொன்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.
News November 13, 2025
அரியலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
அரியலூர்: ரூ.1 லட்சம் பரிசு வேண்டுமா?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலத்துறை அலுவலகத்தில் 26/11/2025-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என அரியலூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.


