News April 12, 2025

பெண்கள் மட்டும் வடம்பிடித்து இழுக்கும் திருத்தேரோட்டம்

image

தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் பகுதியில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமியின் திருத்தேரினை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும், சிறப்பு விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருள் பெற்றனர்.

Similar News

News September 15, 2025

தர்மபுரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் வரும் செப்.16, 17 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT

News September 15, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

தருமபுரியில் இன்று செ.14 இரவு பாதுகாப்பு நடவடிக்கைக்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாக டி.எஸ்.பி. எம். ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளார். மாவட்டத்தின் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் போலீஸ் நிலைய வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு நிலை பராமரிக்க கடுமையான ரோந்து மேற்கொள்ளப்பட உள்ளது. ஷேர் IT

News September 14, 2025

தருமபுரி மாணாக்கர்களே இந்த எண் இருக்கா!

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்கள் இந்த 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாம். *இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க*

error: Content is protected !!