News April 19, 2025
பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர சேவை

பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க
Similar News
News December 23, 2025
திருச்சி: ஶ்ரீரங்கம் கோயில் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சொர்க்கவாசல் திறப்பின் போது சந்தன மண்டபம் நுழைவு சீட்டு ரூ.4000, கிளிமண்டபம் நுழைவு சீட்டு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News December 23, 2025
திருச்சி: ஶ்ரீரங்கம் கோயில் டிக்கெட் கட்டணம் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் கட்டணத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சொர்க்கவாசல் திறப்பின் போது சந்தன மண்டபம் நுழைவு சீட்டு ரூ.4000, கிளிமண்டபம் நுழைவு சீட்டு ரூ.700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் பெற விரும்புபவர்கள் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்குள் கோயில் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
News December 23, 2025
திருச்சி: குறைதீர் கூட்டத்தில் 624 மனுக்களுக்கு தீர்வு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு வகையான உதவித்தொகை மனுக்கள், தெரு விளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடர்பான மனுக்கள் என 624 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


