News April 19, 2025

பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர சேவை

image

பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க

Similar News

News December 27, 2025

திருச்சி: அதிமுக பெண் நிர்வாகி தற்கொலை

image

திருச்சி மாவட்டம், நவல்பட்டு பர்மா காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணியின் துணைச் செயலாளரான இவர், கணவனைப் பிரிந்து மகளுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகளுடன் எழுந்த பிரச்சனையின் காரணமாக மனமுடைந்த ஜெயந்தி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

திருச்சி: எமதர்மனுக்கு உயிர் கொடுத்த ஞீலிவனேசுவரர்!

image

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்பளித்த கோயில் இது என்று கூறப்படுகிறது. மேலும் இக்கோயிலில் சனீஸ்வரனுக்கு அதிபதியான எமன் சந்நிதி இருப்பதால் நவகிரகங்கள் கிடையாது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News December 26, 2025

திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

திருச்சி மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம் என்ற செயலியில்<<>> உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!