News April 19, 2025
பெண்கள் பாதுகாப்பிற்கு 24 மணி நேர சேவை

பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை, தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பெண்களை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும், பெண்கள் மீதான குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர சேவை எண் 181 என்பதை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE செய்ங்க
Similar News
News December 24, 2025
திருச்சி அருகே விபத்தில் உடல் சிதறி பலி!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லாமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேய உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வளநாடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரிக்கும் போலீசார், அவர் மீது மோதிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 24, 2025
அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், இருங்களூர், எதுமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள சித்த மருத்துவ மருந்து வழங்குநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருச்சி அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவில் விண்ணப்பங்களை பெற்று, வரும் 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், இருங்களூர், எதுமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள சித்த மருத்துவ மருந்து வழங்குநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருச்சி அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவில் விண்ணப்பங்களை பெற்று, வரும் 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


