News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 19, 2025
விழுப்புரத்தில் அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 640 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<
News April 19, 2025
இன்று மின்தடை இல்லை விழுப்புரம் மின்வாரியம் அறிவிப்பு

விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஜானகிபுரம் மின்னூட்டியில் இன்று (19.04.2025) மேற்கொள்ளப்பட விருந்த பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே இன்று வழக்கம் போல் மின்னூட்டம் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் / நகரம்/ விழுப்புரம் அலுவலகம் அறிவித்துள்ளது. அதனால் இன்று மின்தடை இல்லை, வழக்கம் போல மின்சாரம் இருக்கும். ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ குட்கா பறிமுதல்

திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்த போது குட்கா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பைக்கில் வந்தவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பதும், திருவெண்ணெய்நல்லூர் அருகே தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.