News April 23, 2025
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – எஸ்பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க எஸ்பி தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று எச்சரித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
குமரி: கோவிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

குமரி மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News November 1, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தல் அதிகாரிகள் நியமனம்

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்துவதற்காக தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி – மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, நாகர்கோவில் – ஆர்டிஓ காளீஸ்வரி, குளச்சல் – ஆதி திராவிடர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் -சப் கலெக்டர் வினை குமார் மீனா, விளவங்கோடு – பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் செந்தூரான், கிள்ளியூர் – ஆயம் உதவி ஆணையர் ஈஸ்வர நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News November 1, 2025
குமரியில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறையா?

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் தேதி உலக மீனவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் தினத்தை கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார்.


