News April 20, 2025
பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோயில்

‘அறுபடை வீடு’ சன்னதிகளில் குடி கொண்டிருக்கும் முருகனை இந்த ஒரே கோயிலில் நம் தரிசிக்கலாம். ஒவ்வொரு சுவாமிக்கும் தனி சன்னதி உள்ளது. இந்த கோயில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாக்ஷேத்ரா காலனியில் உள்ளது. ஆறுபடை வீடுகளில் இருந்தும் புனிதத்தன்மை எடுத்து வரப்பட்டு, இங்கு ஒரே இடத்தில் தனித்தனி கோயில்களாக கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆறுபடை முருகனை வழிபட்ட பலனை பெற முடியும். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 4, 2025
ஏவிஎம் சரவணன் மறைவு : முதல்வர் அஞ்சலி

பிரபல தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு, தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
News December 4, 2025
சென்னையை எட்டி பார்க்கும் சூரியன்!

சென்னையில் 5 நாட்களுக்குப்பின், மீண்டும் சூரிய ஒளி ஆங்காங்கே படர்ந்து வருகிறது. சென்னையின் சில பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரும் வடிய தொடங்கிவிட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு இழந்ததால் இரவு முதலே மழை குறைய தொடங்கிவிட்டது. இன்று மாலை வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேரு இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
News December 4, 2025
நாடு முழுவதும் இன்டிகோ விமான சேவை ரத்து – பயணிகள் அவதி

இன்டிகோ விமான நிறுவனத்தின் விமானிகள், பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்நாட்டு, பன்னாட்டு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மட்டும் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் வாக்குவாதம் ஏற்பட்டது. திருச்சியிலிருந்து சிங்கப்பூர், துபாய் செல்லும் சேவைகளும் ரத்து. பயணிகளுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கப்பட்டு வருகின்றன.


