News October 23, 2024

பூந்தமல்லி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சி அமைந்துள்ளது. இங்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் பணம் கை மாறுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் அடங்கிய 15 போலீசார் இன்று மாலை முதல் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அலுவலகத்தின் நுழைவு கேட்டை மூடி விட்டு யாரும் உள்ளே வந்து செல்லாத வகையில் சோதனை நடக்கிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News July 11, 2025

ஆவடி அருகே தீ பற்றி எரிந்த லாரி

image

நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எலக்ட்ரிக்கல் பொருட்களை ஏற்றிக் கொண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, ஆவடி வெள்ளானூர் தனியார் கல்லூரி அருகே திடீரென புகைவிட்டு தீப்பிடித்தது.தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News July 11, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் ரத்து

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் தற்காலிகமாக ஜூலை 15 முதல் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு பிரதாப் அறிக்கையின் மூலமாக தெரிவித்தார்.

News July 11, 2025

44.5 கோடி ரூபாய் கையாடல் மேலாளர் தற்கொலை

image

புழல் பிரிட்டானியா நகர் திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி (37) மூன்று வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார் அவர் 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்து விட்டதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக நிறுவன சட்ட ஆலோசகர்கள் கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நவீன் நேற்று தூக்கிட்டு உயிரிழந்ததால் புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

error: Content is protected !!