News April 19, 2025
பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 20, 2025
திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்செந்தூர் கோவில் புனிதத்தை பாதிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களை பாடுவது, நடனம் ஆடி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது போன்றவைகளில் ஈடுபடக்கூடாது. இதனையும் மீறி ஈடுபடுபவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
73 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் வரப்பெற்றன. இதனை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
News November 20, 2025
73 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 73 மனுக்கள் வரப்பெற்றன. இதனை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


