News April 19, 2025
பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 22, 2025
BREAKING: தூத்துக்குடியில் கனமழை – கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்றுதிருவைகுண்டம் அணைக்கட்டினை பார்வையிட்டு அலுவலர்களை தொடர்ந்து அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கட்டு அதன் சுற்றியுள்ள குளம் மற்றும் ஏரிகளை ஆய்வு செய்தார்.
News November 22, 2025
தூத்துக்குடி: வங்கியில் வேலை! APPLY NOW

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4.சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. விண்ணப்பிக்க: இங்கு <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


