News August 16, 2024

பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறை

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்து செல்கின்றனர். இதில் கர்ப்பிணிகள், தாய்மார்கள் கை குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இதனிடையே, பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள பாலூட்டும் அறை பூட்டிய கிடப்பதால் தாய்மார்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பூட்டிய அறை திறக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

Similar News

News November 17, 2025

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி இதுவரை 5,86787 கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணி டிசம்பர் 4-ம் தேதியுடன் முடிவடைந்து, டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 17, 2025

பெரம்பலூர்: B.E., படித்தவர்களுக்கு வங்கியில் வேலை

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E.,/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 17, 2025

பெரம்பலூர்: இந்த பகுதிகளில் நாளை மின் தடை

image

கிருஷ்ணாபுரம், எசனை மற்றும் சிறுவாச்சூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.18) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, பாலையூர், தொண்டப்பாடி, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9:30 மணி முதல் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!