News April 21, 2025
பூசாரி கொலை – கொத்தனார் கைது!

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
புதுச்சேரி: ஆடு வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் மாதூர் கிராமத்தில், இயங்கி வரும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்குபெற 7904184739 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 14, 2025
புதுச்சேரி: கடலோர காவல் பிரிவு போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி கடலோர காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பில், ”உப்பளம் மைதானம், பழைய துறைமுகம், புதிய துறைமுகம், கடற்கரை பகுதிகள் உட்பட, கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
புதுவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.


