News April 21, 2025
பூசாரி கொலை – கொத்தனார் கைது!

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
JUST IN புதுச்சேரி: பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு

புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பச்சரிசி 4 கிலோ, நாட்டு சக்கரை 1 கிலோ, உளுத்தம்பருப்பு 1 கிலோ, நெய் 300 கிராம், எண்ணெய் 1 லி மற்றும் தொகுப்பு பை 1 ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகுப்பு புதுவை, கரைக்கால், மாஹே, யானம் பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
புதுவை: வாட்ஸ் அப் வழியாக புக்கிங்!

புதுவை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
புதுவை: அமைச்சு பணியாளர்களுக்கு தேர்வு

புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் அமைச்சு பணியாளர்களுக்கான துறைசார் தேர்வு டிச.14-ம் தேதி புதுவை காரைக்கால், மாஹே, ஏனாம், புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளை புதுவையில் தலைமை செயலகத்தில் உள்ள தேர்வு அறை அலுவலகத்தில் தங்களது அலுவலக அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


