News June 25, 2024

புவனகிரி: திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

image

புவனகிரி பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும் சின்னசேலத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் கடந்த 17.9.2023 திருமணம் நடந்தது. இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று சூர்யாவின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த செல்வகுமார், சூர்யாவின் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 11, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் (ஜூலை 10) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

கடலூர்: விபத்து தொடர்பாக 11 பேரிடம் விசாரணை தொடக்கம்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து சம்பவத்தில் கைதான கேட் கீப்பர் உட்பட 11 பேரிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில்வே கோட்ட மூத்த துணை பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையில் விசாரணை‌ நடைபெற்று வருகிறது. இதில் விபத்து நடப்பதற்கு முன் கொடுக்கப்பட்ட தகவல்கள், விபத்து நடந்ததும் வந்த முதல் தகவல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

News July 10, 2025

கடலூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? ( 1/1)

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT NOW <<17020535>>தொடர்ச்சி <<>>

error: Content is protected !!