News August 15, 2024

புவனகிரி டிரைவரை கடத்தியவர் கைது

image

ராமநத்தத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர்(40) சவாரிக்கு உளுந்தூர்பேட்டை சென்றார். இந்நிலையில் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், கணவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கடத்திய உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டையைச் சேர்ந்த நூர்கான் என்பவரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News January 3, 2026

கடலூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம்!

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் ‘UYEGP’ என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000 – ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News January 3, 2026

கடலூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

News January 3, 2026

கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு

image

குறவன்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் மகன் கிருபாகரன் (14). பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், விடுமுறை காரணமாக நேற்று மாலை கீழ்பாதி ஏரிக்குச் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாமல் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால், மாணவன் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதையடுத்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

error: Content is protected !!