News August 15, 2024

புவனகிரி டிரைவரை கடத்தியவர் கைது

image

ராமநத்தத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர்(40) சவாரிக்கு உளுந்தூர்பேட்டை சென்றார். இந்நிலையில் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், கணவரை கடத்தியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜசேகரை கடத்திய உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன் பேட்டையைச் சேர்ந்த நூர்கான் என்பவரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News January 11, 2026

கடலூர்: மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

image

ஆலடி அடுத்த இருளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மணிகண்டன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மின்சாரம் இல்லாததால், அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மீது மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News January 11, 2026

கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

image

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News January 11, 2026

கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

image

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!