News March 25, 2025

புளியமரத்தில் பைக் மோதி விவசாயி பலி 

image

கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

Similar News

News October 17, 2025

விளம்பர பதாகைகளை வெளியிட்ட ஆட்சியர் சதீஸ்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடனான விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துக்கொள்ளும் வழிமுறைகள் என்று இணையவழியாக பொய்யாக பரப்பப்படுகின்றது. இந்த செய்தியை கண்டிக்கும் வகையில் விளம்பர பதாகைகளை ஆட்சியர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.

News October 17, 2025

ஆட்சியர் சதீஸ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ், தலைமையில் நேற்று அக்.16 நடைபெற்றது. உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்)சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) பாரதி, மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 17, 2025

தருமபுரி: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

தருமபுரியில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம். அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!