News March 25, 2025
புளியமரத்தில் பைக் மோதி விவசாயி பலி

கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
Similar News
News December 4, 2025
தருமபுரியில் 8 பவுன் நகையை மீட்ட காவலர்!

சேலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி நாகர்கோவிலில் இருந்து சேலம் – மும்பை ரயிலில் சேலத்துக்கு வந்தார், செவ்வாய்க்கிழமை சேலம் வந்ததும் தமிழ்ச்செல்வி ரயிலைவிட்டு இறங்கியுள்ளார். அப்போது ரயிலில் 8 பவுன் நகை & 3000 பணப்பையை ரயிலில் தவற விட்டுள்ளார். பின், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், தருமபுரி உதவி ஆய்வாளர் ரமேஷ், நகை & பணத்தை மீட்டு நேற்று (டிச.3) தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தார்.
News December 4, 2025
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 4, 2025
தருமபுரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


