News March 28, 2025
புலி தாக்கி உயிரிழப்பு: 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நீலகிரி, கவர்னர் சோலை பகுதியில் உள்ள கொல்லகோடு மந்தையைச் சேர்ந்த கேந்தர் குட்டன் என்பவர் நேற்று புலி தாக்கி உயிரிழந்தார். இந்தநிலையில் உயிரிழந்த கேந்தர் குட்டன் குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 லட்சம் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இதற்கான காசோலையை ந்தர் குட்டன் குடும்பத்திற்கு வனத்துறையினர் வழங்கினர்.
Similar News
News November 24, 2025
நீலகிரி வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்

குன்னூர் நகரில் 1978 ஆண்டு நவம்பர் மாதம் இதே 24 தேதி பகல் நேரத்தில் வரலாறு காணாத அளவில் சுமார் 2 மணி நேரத்தில் 500 மி.மீட்டர் மழை பெய்தது . அதில் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. மார்க்கெட் , வி.பி. தெரு , கிருஷ்ணாபுரம் , பரசுராமன் தெரு , வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது . 500 கடைகள் நீரில் முழ்கின. நீலகிரி வரலாற்றில் நவம்பர் 24 தேதி மறக்க முடியாத நாளாகும்.
News November 24, 2025
நீலகிரியை சேர்ந்தவருக்கு அரசு விருது

நூலகத் தந்தை எனப் போற்றக்கூடிய ரெங்க நாதன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நல் நூலகர் விருதும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அதிகரட்டி கிளை நூலகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு நல் நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது இவ்விருதிணை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வழங்கினார்.
News November 24, 2025
BREAKING கூடலூர் அருகே புலி தாக்கி பெண் பலி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழப்பு. மேலும் உயிரிழந்த அப்பெண்ணின் உடலானது ஆற்றங்கரையோரம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெண்ணை கொன்ற புலியை உடனடியாக பிடிக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


