News August 24, 2024

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் கைது

image

சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ரவி போக்சோவில் கைது செய்யப்பட்டார். வடசென்னை மாவட்ட அரசு குழந்தைகள் நல அலுவலர் தந்த புகாரின் பேரில், போலீசார் ரவியை இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவி, புதுச்சேரி மாநில புரட்சி பாரதத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 6, 2025

சைபர் மோசடி குறித்து சென்னை காவல்துறை முக்கிய அறிவுரை

image

சென்னை பெருநகர காவல் துறை சைபர் மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது. மோசடியில் சிக்கினால், உடனடியாக வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனைகளை முடக்க வேண்டும். மேலும், 1930 என்ற எண்ணுக்கு அழைத்து உதவி பெறலாம். போலி இணையதளங்கள் மூலம் மக்கள் ஏமாறாமல் இருக்க, அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 5, 2025

சென்னை வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

image

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை சென்னை மக்கள் இரவு 8 மணி முதல் 8.05 மணி வரை ISS-ஐ வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும்.

News July 5, 2025

சென்னையில் நாளை மினி மாரத்தான்

image

சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் ‘COOP-A-THON’ மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நாளை (ஜூலை 6, ஞாயிறு) காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற மையக்கருத்தில் 5 கி.மீ. தூரத்திற்கான இந்த ஓட்டப்பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!