News March 21, 2024
புரட்சி பாரதம் அவசர ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு

திருவள்ளூர், பூவிருந்தவல்லி அருகே உள்ள ஆண்டர்சன் பேட்டை பூவையார் திடலில் புரட்சி பாரதம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம், நாளை (மார்ச்22) காலை 10 மணி அளவில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 15, 2025
திருவள்ளூரில் பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, திருவள்ளூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
News October 15, 2025
திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளிடம் இருந்து வெளிநாட்டில் பல்கலைக்கழகங்களில் பயில 2025- 2026 ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பிக் www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து ஆணையர் சிறுபான்மையினர் நலத்துறை சேப்பாக்கம் சென்னை என்ற முகவரிக்கு அக். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். SHARE
News October 15, 2025
கொலை முயற்சி வழக்கு ரவுடிக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை

வளசரவாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம்(49) என்பவரை போரூரை சேர்ந்த ரவுடி அஸ்வந்த்(30) கடந்த 2022ம் ஆண்டு தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுப்பட்டார். வளசரவாக்கம் போலீசார் அஸ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அஸ்வந்த் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.