News March 21, 2024

புரட்சி பாரதம் அவசர ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு

image

திருவள்ளூர், பூவிருந்தவல்லி அருகே உள்ள ஆண்டர்சன் பேட்டை பூவையார் திடலில் புரட்சி பாரதம் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம், நாளை (மார்ச்22) காலை 10 மணி அளவில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 19, 2025

ஆர்.டி.ஓ., சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையி சோதனை

image

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, ஆர்.டி.ஓ., சோதனை சாவடியில், தொடந்து லஞ்ச புகார்கள் எழுந்த நிலையில், இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

News November 19, 2025

திருவள்ளூர்: இன்று இதை செய்தால் செல்வம் பெருகும்…

image

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், நீங்கள் மாலை நேரத்தில் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்களுக்கு செல்வ வளம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க.

News November 19, 2025

திருவள்ளூர் தள்ளுவண்டி கடைகளுக்கு இனி கட்டாயம்

image

திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் இலவசமாக உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும், உரிமம் பெறாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!