News December 6, 2024
புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விருந்து

தருமபுரி மாவட்டம், ஜோதிமஹாலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி கலந்துகொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 27, 2025
தருமபுரி பொதுமக்களுக்கு HAPPY NEWS!

ஈரோடு – சென்னை இடையேயான ஏற்காடு எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டிலிருந்து வழக்கமாக இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில்(22650) ஜன.1-ம் தேதி முதல் 9:45 மணிக்கு புறப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இரவு 10:34-க்கு பதிலாக 11:19-க்கும், மொரப்பூரில் 10:59-க்கு பதிலாக 11:39-க்கும் நின்று செல்லும். இந்த ரயில் காலை 4:25 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
News December 27, 2025
தீர்த்தமலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட MLA!

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (டிச.27) அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீர்த்தமலையில், அரூர் MLA வே.சம்பத்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் அம்மன் ரவி, ராம்கி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர். பின், மக்கள் நிரப்பும் படிவங்களை மேற்பார்வையிட்டார்.
News December 27, 2025
தருமபுரி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


