News October 23, 2024
புயல் உருவாகிறதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் புயல் ‘டானா’ சின்னம் உருவானதால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் பரவலாக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வந்தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 6, 2025
செங்கல்பட்டு: சிறுமியிடம் அத்துமீறிய வழக்கில் 7 ஆண்டுகள் சிறை!

தாம்பரம் பகுதியில் 9 வயது சிறுமி குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். அந்த பகுதியை சார்ந்த சுல்தான் அங்கிருக்கும் குழந்தைகளுக்கு குரான் சொல்லி குடுத்து வந்த நிலையில் அந்த சிறுமியும் அவரும் குரான் படித்துள்ளார். 26/9/17 அன்று சுல்தான் சிறுவர்களை கடைக்கு அனுப்பி விட்டு சிறுமியிடம் அத்துமீற முயன்றுள்ளார்.இதையறிந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். கோர்ட்டில் நேற்று 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
News December 6, 2025
செங்கல்பட்டு: பெட்ரோல் பங்க் மீது லாரி மோதி விபத்து!

அச்சரப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி தொழுப்பேடு பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது.இங்கு, தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி சுண்ணாம்பு மாவு ஏற்றிச்சென்ற ஈச்சர் வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக இரவு பணி செய்யும் காவல் அலுவலர்களின் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர உதவிக்கு பயன்படுத்திக் கொள்ளவும். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


